ஸ்ரீதேவியின் உடல் அவரது வீட்டிற்கு வந்த பிறகு என்ன நடந்தது தெரியுமா..? அதிர்ச்சி தகவல்..!!

துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.

அவரின் உடல் மும்பை வந்தபோது அவரின் வீட்டில் நடந்ததை பார்த்த ஒருவர் செய்தியாளர்களிடம் அதை கூறியுள்ளார்.


ஸ்ரீதேவியின் வீட்டில் இருந்து அழுகை சத்தம் வந்து கொண்டே இருந்தது. இன்று இரவு தான் அவரது குடும்பத்தாரால் ஸ்ரீதேவியுடன் இருக்க முடியும் என்று பலரும் தெரிவித்தனர்.

கபூர் குடும்பத்தின் பாசத்தை தான் ஸ்ரீதேவி விரும்பினார். அந்த பாசம் அவருக்கு கிடைத்தது. ஸ்ரீதேவியின் இறுதிப்பயணம் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்பதில் கபூர் குடும்பத்தினர் மிகுந்த அக்கறை செலுத்தினார்கள்.


போனி கபூரின் தம்பி அனில் கபூர் மனைவியின் சகோதரி பூனம் வீட்டை மலர்களால் அலங்கரித்தார். ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது வேலைக்காரர்களிடம் அவ்வளவாக பேசியது இல்லை. இருப்பினும் அனைவரும் அழுகையும், கண்ணீருமாக இருந்தனர்.

இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவின் ஒய்.ஆர்.எப். பிலிம்ஸ் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்ட தேவையான ஏற்பாடுகளை செய்தது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி