பிரபல இயக்குனர் மனைவி பிரியாவின் காதல் வலையில் விழுந்தது எப்படி தெரியுமா?


டைரக்டர் அட்லி மனைவி பிரியாவின் காதல் வலையில் விழுந்தது எப்படி? சினிமாவுக்கு வந்த கதை தெரியுமா…!!

மெர்சல் படம் தான் இப்போது இந்தியா முழுக்க ஒரே பேச்சாக உள்ளது. அந்த அளவுக்கு மெர்சலான ஒரு படத்தை கொடுத்த அட்லியின் சொந்த ஊர் மதுரை.

ஆனால் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். சொந்த பெயர் அருண் குமார். சினிமாவுக்காக அட்லி என மாற்றி கொண்டார்.


சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தார். இவரது தந்தை மூலமாக டைரக்டர் ஷங்கரிடம் துணை இயக்குனராக சேர்ந்தார்.

எந்திரன் முதல் நண்பன் வரை அவரிடம் அசிஸ்டென்டாக வேலை பார்த்தார்.

பின்னர் 2013ல் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனரானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து தெறி தற்போது மெர்சல் வரை இவரை வெற்றி பயணம் தொடர்கிறது.


இவரது மனைவி ப்ரியா ஒரு சீரியல் நடிகை. விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

அட்லி ஒரு முறை விஜய் டிவிக்கு சிவகார்த்திகேயனை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது பிரியாவை சந்தித்துள்ளார். பின்னர் நட்பாகி ஒருவரை ஒருவரை காதலிக்க தொடங்கினர். இப்போது அது கல்யாணத்தில் முடிந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!