சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் நேற்று வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு உரிமை கோரி நடிகர் பிரசாந்தின் அம்மா சாந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். சமீபத்தில் இதை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட தடையில்லை என கூறியதை தொடர்ந்து தமிழில் படம் வெளியானது.
இப்படம் கேங் என தெலுங்கிலும் வெளியாகிறது.
இந்நிலையில் சாந்தி இதை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதில் தெலுங்கில் படத்தை வெளியிட தடைவிதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
இதை விசாரித்த தலைமை நீதிபதிகள் தெலுங்கிலும் படத்தை வெளியிட தடையில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!