மறைந்த நடிகர் நிதிஷ் வீரா குறித்து இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி, என்ன கூறியுள்ளார் தெரியுமா?

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் தான் நிதிஷ் வீரா.

இவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இந்நிலையில் அவரின் மறைவு குறித்து பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் நிதிஷ் வீரா குறித்து பேசியுள்ளார். “அவரை எனக்கு புதுப்பேட்டை படத்திலிருந்து தெரியும். அப்போது நான் உதவி இயக்குனராக இருந்தேன்.

தனுஷ் மூலமாக எனக்கு பழக்கம் ஆனார். அசுரனுக்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!