காரில் அதிவேகமாக சென்று போலீசிடம் சிக்கிய நடிகர் கார்த்தி.. அவரே கூறிய உண்மை தகவல்

போலீசிடம் சிக்கிய நடிகர் கார்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் தொடர்ந்து பல திரைப்படங்கள் வெளியாக தயாராகி இருக்கிறது.

நடிகர் கார்த்தி நடிக்க வருவதற்கு முன் USல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு நாள் நண்பர்களுடன் விடுமுறை நாளை கொண்டாட வெளியே சென்றுள்ளாராம்.

ஒரு காரில் சில நண்பர்களும் மற்றொரு காரில் கார்த்தி மற்றும் சில நண்பர்களும் சென்றுள்ளார்கள். அப்போது நண்பர்கள் அனைவரும் இணைந்து கார் ரேஸில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் சென்ற சாலை அதிகபட்சம் 55 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், இவர்கள் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளார்கள். இதை கவனித்த போலீஸ் உடனடியாக அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அதன்பின், நீதிபதியின் உத்தரவின்படி $250 டாலர் ஃபைன் கட்டிவிட்டு வெளியேறியுள்ளார்கள். இந்த தகவலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தான் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி வெளிப்படையாக கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!