இளையராஜாவின் மறுபக்கம்.. நெகிழ்ந்த பிரபல இசையமைப்பாளர்

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவை குறித்து பிரபல இசையமைப்பாளர் பதிவிட்டுள்ளார்.

இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசை கச்சேரிகளை பல நாடுகளில் நடித்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம், இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.


இந்நிலையில் சென்னையில் இன்று 18-ஆம் தேதி ‘ராக் வித் ராஜா’ என்ற இசைக்கச்சேரி நடக்கவுள்ளது. இதில் இளையராஜாவும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாடல்களை பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக இவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அச்சமயத்தில் எடுத்த கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இளையராஜா குறித்து நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார். 

அதில், “மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் அன்பும் பாசமும் நிறைந்த பக்கம் இது. இந்த புகைப்படத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்” என பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!