சிவகார்த்திகேயனிடம் ஸ்பெஷல் என்ன?: உண்மையை சொன்ன வாரிசு நடிகை

கல்யாணி ப்ரியதர்ஷன் சிவகார்த்திகேயன் பற்றி தெரிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன், நடிகை லிசியின் மகள் கல்யாணி சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். படத்தில் ஹீரோவை காதலிப்பதை தவிர அவருக்கு பெரிய வேலை இல்லை.

சொல்லப் போனால் படம் பார்த்தவர்களை இவானா தான் கவர்ந்துவிட்டார். இருப்பினும் கல்யாணி தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து கூறுமாறு சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கல்யாணி கூறியிருப்பதாவது,

சிவகார்த்திகேயனின் எனர்ஜியால் அவரை சுற்றியுள்ள அனைவர் முகத்திலும் சிரிப்பு இருக்கும். அவர் தன்னை சுற்றியுள்ளவர்கள் வளர வேண்டும், பெரிய விஷயங்கள் செய்ய வேம்டும் என்று விரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்தவர்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் ஆட்கள் அதிகம் உள்ள நிலையில் சிவாகார்த்திகேயனுக்கு தான் எவ்வளவு தங்கமான மனசு என்று ரசிகர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் முதன்முறையாக சூப்பர் ஹீரோவாக நடித்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே ஹீரோ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் போஸ்கோ பிரபு புகார் அளித்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஹீரோ பட இயக்குநர் பி.எஸ். மித்ரன், கதை யாரிடமும் இருந்து திருடப்படவில்லை, இது என்னுடையது என்று விளக்கம் அளித்துள்ளார்.

கல்யாணி அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!