அண்ணாநகரில் சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை

சென்னை அண்ணாநகரில் சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்(39). இவர் அண்ணா நகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா. டி.வி. சீரியல் நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் உள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை கோபிநாத் வேலை பார்த்த அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அவர்கள் உள்ளே சென்றபோது அங்கிருந்த அறையில் கோபிநாத் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபிநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

கோபிநாத் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு டி.வி. சீரியல் நடிகையும், தொகுப்பாளினியுமான ரேகாவை காதலித்து திருமணம் செய்து உள்ளார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரேகா தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

கோபிநாத் கடந்த 6 மாதங்களாக ஜெ.ஜெ. நகரில் இயங்கி வரும் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அப்போது அவருக்கு அதே நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கோபிநாத் கடன் பிரச்சனையிலும் சிக்கி இருந்தார்.

இதனால் மனைவி ரேகாவிடம் வழக்கம் போல் தகராறு செய்து விட்டு அலுவலகத்திற்கு சென்ற கோபிநாத் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரது தற்கொலை முடிவுக்கு வேறுஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!