அஜித்தின் வலிமை பட பாக்ஸ் ஆபிஸ் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் கூறிய தகவல்- படு மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பல நாள் காத்திருப்புக்கு கிடைத்த வரப்பிரசாதம் போல் ரிலீஸ் ஆனது தான் அஜித்தின் வலிமை. கிட்டத்தட்ட அஜித்தை திரையில் காண 2 வருடங்கள் காத்திருந்தார்கள் ரசிகர்கள்.

படத்தின் வசூல்
படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது. அதிலும் அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் படத்தில் இருந்த எல்லா விஷயத்தையும் தாண்டி ஹைலைட்டாக அமைந்துவிட்டது.

தமிழகத்தில் ரூ. 130 கோடிக்கு மேல் வசூலித்துள்ள படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

திருப்பூர் சுப்ரமணியன்
படங்களின் வசூல் விவரங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வரும், மக்கள் அந்த விவரங்களை பார்த்து கொண்டாடி வரும் வேலையில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் ஒரு விவரம் கூறுவார்.

பாதி நேரம் அவர் சொல்லக் கூடிய வசூல் விவரங்கள் சமூக வலைதளங்களில் சுற்றும் வசூல் விவரங்களுக்கு இணையாக இருக்கும். தற்போது அஜித்தின் வலிமை படம் குறித்தும் அவர் கூறியுள்ளார்.

அஜித்தின் திரைப்பயணத்திலேயே வலிமை படம் தான் அதிகம் வசூல் செய்துள்ள படம் என தெரிவித்திருக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!