புதிய படத்திற்கு தயாராகும் லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ளது.

மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் 2500- க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், லெஜண்ட் சரவணன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை நிறைந்த சமூக அக்கறையுள்ள படமாக இருக்க வேண்டும். அதுதான் பொது மக்களை ரசிக்கச் செய்யும் என்று இயக்குனரிடம் கோரிக்கை விடுத்து லெஜண்ட் சரவணன் கதை கேட்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!