வாய்ப்புக்காக இதை செய்ய மாட்டேன் என்று சொல்லுங்கள்.. நடிகை ஆண்ட்ரியா அதிரடி

தமிழ் சினிமாவில் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் 1,2, மாஸ்டர் என சிறந்த கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி துணிச்சலான பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா, Me Too விவகாரம் குறித்து சில வருடங்களுக்கு முன் அதிரடியாக பேசியிருந்தார்.

இதில் ” எனக்கு ஒரு ஆண் நபரை பிடிச்சுருக்கு. அவருக்கும் என்னை பிடிச்சுருக்கு நாங்க டேட்டிங் செய்ய போறோம், அப்படினா அது வேற. நான் என்னை மிகவும் மதிக்கிறேன். என்னுடைய தரம் எனக்கு தெரியும் “.

“அதேபோல் என் திறமையும் எனக்கு தெரியும், நான் வேலைக்காக ஒருபோதும் படுக்கையை பகிர மாட்டேன் என ஒரு பெண் துணிந்து சொன்னால் casting couch என்பது இல்லாமலே போயிடும் ” என பேசியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!