“சாவே உனக்கொரு சாவு வந்து சேராதோ”..!! தீயில் பலியானவர்களுக்கு கவிஞர் இரங்கல்..!!


தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற சாகச பயிற்சிக்கு சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கியதும், அவர்களில் 9 பேர் உயிர் இழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்காக பலரும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

கவிஞர் வைரமுத்து ‘உயிர் வலிக்கிறது’ என்ற தலைப்பில் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“உயிர் வலிக்கிறது. ஊரே அழுகிறது. காட்டுத் தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன். ‘சாவே உனக்கொரு சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டி பாரோமோ’ என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன் வாங்கி கலங்குகிறேன்.

இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனித பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம். புதிய இழப்புகள் நேராமல் காப்போம்”.

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி