முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் – இயக்குனர் மீது நடிகை புகார்

நடிகை ஜரீன் கான் 2010-ம் ஆண்டு வெளியான சல்மான் கானின் வீர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நகுல் நடிப்பில் வெளியான, நான் ராஜாவாகப் போகிறேன் படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது பஞ்சாபி மொழியில் உருவாகியிருக்கும் டாக்கா படத்தின் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் ஜரீன் கான் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சினிமா துறைக்கு வந்த புதிதில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். ஒரு படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டியிருந்ததாக கூறிய ஜரீன் கான், அதற்காக அந்த படத்தின் இயக்குனர், தன்னுடன் முத்தக்காட்சியை ஒத்திகை பார்க்க வேண்டும் என அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

முத்தக் காட்சியை தன்னுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டால்தான் காட்சியின் போது தயக்கம் இருக்காது என்று அந்த இயக்குநர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு தான் உடன்படவில்லை என்றும், தான் எந்த முத்தக்காட்சியையும் ரிகர்சல் செய்வதில்லை என்று கூறிவிட்டதாகவும் ஜரீன்கான் தனது பேட்டியில் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி இந்தி சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.