மற்றவர்களை காயப்படுத்துவதில் சேரன் வல்லவர்! எனக்கு நிறைய அனுபவம் இருக்கு! உண்மையை உடைத்த பார்த்திபன்!

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் இயக்குநர் சேரன் பாவம் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஆனால் அவர் நடிப்பதாக பார்வையாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

தான் ஒரு இயக்குநர் என்பதை சரியாக காட்டுகிறார் சேரன் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் சேரன் இயக்கத்தில் நடித்த பார்த்திபன் அவர் பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் சேரன் பற்றி கூறியிருப்பதாவது,

சேரன் ஒரு கடின உழைப்பாளி. பாரதி கண்ணம்மா படம் ரொம்ப சீரியஸாக இருந்ததாக நினைத்தேன். இதையடுத்து நான் வடிவேலுவுடன் சேர்ந்து வேறு படத்தில் நடிக்க எழுதி வைத்திருந்த காமெடி காட்சிகளை சேரனிடம் கொடுத்தேன். அப்படி வந்தது தான் குண்டக்க மண்டக்க காட்சி. அதை ஏற்க மறுத்தார் சேரன்.

நீங்கள் ஏற்கனவே பிரபலமான இயக்குநர். நான் இப்பொழுது தான் வந்துள்ளேன். உங்கள் ஐடியாவை ஏற்று அது ஒர்க்அவுட் ஆனால் எனக்கு அது உதவாமல் போய்விடும் என்பதால் மறுக்கிறேன் என்றார். படம் வெற்றி பெற்றால் அனைவருக்கும் நல்ல பெயர் வரும் என்று கூறி அவரை சமாதானம் செய்தோம். ஆனால் அவர் தகராறு செய்து, எனக்கு ஊரெல்லாம் கெட்டப் பெயர் வாங்கிக் கொடுத்தார்.

அதே மனிதர் வெற்றிக்கொடி கட்டு படத்தில் எனக்கும், வடிவேலுவுக்கும் இடையே காமெடி சீன்கள் செய்ய வேண்டும் என்றார். நான் ஒத்த செருப்பு படத்தில் பிசியாக இருப்பதால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை பார்க்கவில்லை. சேரன் சமூக அக்கறை உள்ள இயக்குநர்.

அவரிடம் எனக்கே பிடிக்காத சில விஷயங்கள் உள்ளது. குப்பையான ஏதோ படத்தை பார்த்துவிட்டு மேடையில் அவர் விமர்சனம் செய்யும்போது என்னங்க இது பார்த்திபன் படம் போன்று செய்துள்ளீர்கள் என்றார். மற்றவர்களை காயப்படுத்த அவர் கவலையே பட மாட்டார். அது அவரின் ஸ்பெஷல் குணம் என்றார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.