ஆர்ப்பரிக்கும் அழகில் திருமணத்திற்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்ட முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளினி


சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தற்போது நியூஸ் 7 தொலைக்காட்சியில் பணியாற்றிவருகிறார். இவரின் பவ்யமான அழகு தான் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்து புகழ் பெற்ற இவர், தற்போது கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கடந்த மாதம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென திருமணம் நடைபெற்றது. அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் கவலையில் மீம்ஸ்களை போட்டு நெட்டிசன்ஸ்களின் கவனத்தை திருப்பினர். இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக சன் தொலைக்காட்சியில் செய்தி வாசித்ததாக கூறி புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார் அனிதா.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் ” தாலி எங்கே ? என்று கெட்டி ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கு பதிலளித்த அனிதா சம்பத் , தாலியை கழற்றுவதில்லை மதத்தை அடையாளப்படுத்த விரும்பாமல் மறைத்துக்கொள்வேன். ஆனால், அப்படியே கழற்றினாலும் அதில் ஒன்றும் தவறில்லை இது என் விருப்பம் என ரிப்ளை செய்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.