நாளை வீட்டை விட்டு வெளியேறுவாரா வனிதா? – ஆர்வத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட் வழக்கம் போல சண்டை சச்சரவுகளுடன் சென்றது. லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் எல்லாம் முடிவடைந்துவிட்ட நிலையில் நேற்று புதிய தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டதாக ஹவுஸ் மேட்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சாக்ஷி, மோகன் வைத்தியா, வனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த டாஸ்கில் இவர்கள் மூன்று பேருக்கும் ஒரு வெல்க்ரோ உடன் கூடிய ஜாக்கெட் கொடுக்கப்பட்டது. மற்றொர வெல்க்ரோ ஸ்டிக்கரும் கொடுக்கப்பட்டது. யார் உடம்பில் பஸர் அடிக்கும்போது ஓட்டப்பட்டிருந்தோ அவர்கள் தோல்வியடைந்தவர்கள் என அறிவிக்கப்பட்டது.

முதலில் மோகன் வைத்தியா இதை முயற்சி செய்தார் ஆனால் அவரால் யார் மீதும் ஒட்ட முடியவில்லை. அடுத்தாக சாக்ஷி வனிதா மீது அந்த ஸ்டிக்கரை ஓட்டினார். ஆனால் வனிதா அதன் பின் அந்த டாஸ்க் முறையாக அமைக்கப்பட்வில்லை என குற்றம்சாட்டி அந்த டாஸ்கில் இருந்து விலகினார். இதற்கிடையில் தர்ஷனிற்கும், வனிதாவிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

மீராவில் தொடங்கி, மதுமிதா, சேரன், அபிராமி, ஃபாத்திமா பாபு, தர்ஷன் என அனைவரிடமும் சண்டையிட்டு கார்னர் செய்யும் இவர் வீட்டை விட்டு வெளியேறுவாரா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.