மகளுக்காக நடு வீதியில் கதறி அழுத பிரபல நடிகர்..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!


தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அதன் பிறகு காமெடியனாக நடிக்க துவங்கினார். தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் பல ஹாலிவுட் படங்களில் இவரது குரல் ஒலிக்காமல் இருக்காது. எம்.எஸ் பாஸ்கரின் மகளும் டப்பிங் பணியை செய்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த நிலையில்., நேற்று புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தனது அப்பாவுக்கு நியூ இயர் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க வேண்டும் என்று எம்.எஸ் பாஸ்கரின் மகள் முடிவு செய்தார்.


அதன் படி., நேற்று பெசன்ட் நகர் பீச்சில் எம்.எஸ் பாஸ்கரின் கண்ணை கட்டி கூட்டி சென்ற அவர் மகள்.,தனது தந்தைக்கு ராயல் என்பீல்டு புல்லட் வண்டியை பரிசாக கொடுத்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத எம்.எஸ். பாஸ்கர் தனது மகளை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார்.

தாய் தந்தையை தவிக்கவிடும் சில மகள்கள் மத்தியில்., தந்தையின் மீது பாசம் வைத்துள்ள எம்.எஸ் பாஸ்கரின் மகளை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!