தயாரிப்பாளரால் வாழ்க்கையை இழந்த பிரபல நடிகை..!! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!!!


1980 ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் நிஷா நூர். இவர் நடிகர் கமலுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ஸ்ரீராகவேந்திரர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதனுடன்., முயலுக்கு மூணு கால்., மானாமதுரை மல்லி., கல்யாண அகதிகள் போன்ற படங்களிலும் நிஷா நூர் நாயகியாக நடித்திருந்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த நிலையில் அவர் திடீரென படத்தில் நடிப்பதை நிறுத்தினார். தயாரிப்பாளர் ஒருவர் நிஷாவை கட்டாயப்படுத்தி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியதால் அவர் நடிக்கவில்லை என்று அப்போது செய்திகள் வெளியானது.


பாலியல் விவகாரம் வெளியே தெரிந்ததால் இயக்குனர்கள் யாரும் அவரை நடிக்க வைக்க விரும்பவில்லை. அதன் பிறகு நிஷா எங்கே இருக்கிறார் என்கின்ற தகவல் தெரியாமல் இருந்தது.

பல ஆண்டுகள் கழித்து நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா அருகில் ஒரு பெண்மணி உடல் மெலிந்து எலும்பு கூடு போன்று படுத்திருந்தார்.

பிறகுதான் தெரிந்தது அவர் நடிகை நிஷா நூர் என்று. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக படுத்திருந்த நிஷாவை சிலர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால்., நோய் முற்றிய நிலையில் இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. 2007 ஆம் ஆண்டு நிஷா நூர் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 44 என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!