ட்வீட்டரில் செம்மையா பல்பு வாங்கிய ஆர்த்தி..!! இதெல்லாம் தேவைதானா..!!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர்/கவிஞர் சினேகன். இவரிடம் உங்களுக்கு எப்போது திருமணம்.? என்ற கேள்வியை கேட்டு பல்பு வாங்கியுள்ளார் நடிகை ஆர்த்தி.

சமூக வளைத்தளங்களில் பிரபல சினிமா நட்சத்திரங்களின் பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் பல சர்சைக்குள்ளான, வேடிக்கையான விஷயங்களை சில மர்ம நபர்கள் செய்து வருவது வாடிக்கை.


இந்நிலையில், நேற்று #AskThalaivarSnehan என்ற டேக்கை ட்ரென்ட் செய்து பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். உண்மை என்னெவென்றால், சினேகனுக்கு சமூக வளைத்தளங்களில் கணக்கே கிடையாது. யாரோ ஒரு மர்ம நபர் இந்த வேலையை செய்துள்ளார்.

இதனை அறியாத ஆர்த்தி, உங்களுக்கு எப்போது திருமணம்..? என்ற கேள்வியை கேட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் இது போலியான் கணக்கு என்று அவரிடம் தெரிவித்தனர். இதனால், பல்பு வாங்கிய ஆர்த்தி அது எனக்கு தெரியும்..! என பதிலளித்து சமாளித்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!