பாதுகாப்பற்ற பயணம்…. உபர் கார் டிரைவர் மீது பிக்பாஸ் பிரபலம் புகார்

உபர் காரில் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ததாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்விகா. பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதன் டைட்டில் வெற்றியாளராகவும் ஆனார்.

இந்நிலையில் நடிகை ரித்விகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஊபர் நிறுவனத்தின் கார் ஓட்டுநரான ஜெய்னுலாப்தீன் என்பவர் மீது புகார் கூறி பதிவு ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் ரித்விகா வெளியிட்டுள்ளார். மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ததாகவும் ஓட்டுனர் மிகவும் ராஷ் டிரைவிங் செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

வண்டியின் எண்ணையும் காரின் பெயர் டாட்டா இன்டிகா என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த உபர் நிறுவனம் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளது. தற்போது ரித்விகா, “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!