பயில்வான் ரங்கநாதன் அடுத்தடுத்த கேட்ட கேள்வி- கோபமாக துல்கர் சல்மான்

எல்லா புதுப்படங்களுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடப்பது வழக்கம்.
அதிலும் இந்த கொரோனா காலகட்டம் வந்ததில் இருந்து தனியாக எந்த ஒரு யூடியூப் பக்கத்திற்கும் பிரபலங்கள் அவ்வளவாக அதாவது முன்பை போல் ஒரு படத்திற்காக பேட்டிகள் கொடுப்பது இல்லை.

பயில்வான் பயணம்
பத்திரிக்கையாளர்களில் மக்களுக்கு நன்கு அறியப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன்.
பத்திரிக்கையாளர் என்பதை தாண்டி பல படங்களிலும் நடித்துள்ளார். உருவத்தை போலவே எல்லா பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் யாருக்கும் பயப்படாமல் எப்போதும் தைரியமாக தோன்றிய விஷயத்தை கேட்டுவிடுவார்.

அதனால் அவர் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம் என்றே கூறலாம்.

சீதா ராமன் பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஹனு ராகவ்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா, மிருணாள் ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளிலும் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீஸ் ஆகப்போகும் திரைப்படம் சீதா ராமன்.

இப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது, துல்கர் சல்மான் வந்திருந்தார். அவரிடம் பயில்வான், சீதா ராமம் பட பெயர், படத்தில் உங்கள் பெயர் ராம் சொன்னீங்க, அப்போது ராமம்னா என்ன என கேட்க,ஒரு கதையை பற்றி சொல்லும்போது இரண்டையும் ஒன்றாக சேர்த்து சீதா-ராமம் என்று வைத்துள்ளார்கள் என்றார்.

ஆனால் பயில்வான் எனக்கு ராமம்க்கு அர்த்தம் தெரிஞ்சாவனும் என கேட்க, துல்கர் கதையை நான் எழுதல, பெயர் பற்றி கூற இயக்குனர் இங்கு இல்லை, அவர் இருந்தால் சூழ்நிலை இப்படி இருக்காது என கூறியுள்ளார்.

அப்போது என்னவென்றே தெரியாமல் படம் நடித்தீர்களா என கேட்க, நான் படத்தில் நடிக்கும் போது பெயர் வைக்கவில்லை, ஒரு மாதம் முன்பு தான் பெயர் வைத்தார்கள் என்றார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!