சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


தன்னை விளாசிய நடிகை பார்வதிக்கு கொலை மிரட்டல், பலாத்கார மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து மவுனம் கலைத்துள்ளார் மம்மூட்டி.

கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய நடிகை பார்வதி கசாபா படத்தில் மம்மூட்டி பெண்களுக்கு எதிராக பேசியுள்ளது வருத்தம் அளிக்கிறது. பெரிய ஸ்டாராக இருந்து கொண்டு இந்த வயதில் இப்படி செய்யலாமா என்று கேட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதையடுத்து மம்மூட்டியின் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர், கலாய்த்தனர்.

மிரட்டல்
பார்வதி

மம்மூட்டியை பற்றி பேசியதற்காக பார்வதிக்கு கொலை மிரட்டல், பலாத்கார மிரட்டல் எல்லாம் விடுக்கப்பட்டது. இத்தனை நடந்தும் மம்மூட்டி வாய் திறக்காமல் அமைதியாக இருந்தார்.

புகார்
கைது


சமூக வலைதளங்களில் ஓவராக பேசியவர்கள் மீது பார்வதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 2 பேரை கைது செய்துள்ளனர்.

மம்மூட்டி
பேட்டி

இறுதியாக மம்மூட்டி மவுனம் கலைத்துள்ளார். பார்வதி விஷயம் பற்றி அவர் மலையாள மீடியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பார்வதி ஏற்கனவே என்னிடம் பேசிவிட்டார். இந்த சர்ச்சைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். என் சார்பில் பேசுமாறு நான் யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை என்றார்.

ஆரம்பத்திலேயே
பரவாயில்லை

இந்த விஷயத்தில் மம்மூட்டி இஷ்டத்திற்கே விட்டுவிடுகிறேன். அவர் ஆரம்பத்திலேயே பேசியிருக்க வேண்டும். தற்போது விளக்கம் அளித்தது பரவாயில்லை என பார்வதி தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!