போதையில் மகன்… மீட்க போராடும் தந்தை நடிகர்..!! என்ன கொடுமைடா..!!


படப்படிப்பு தாமதமாக வந்து தயாரிப்பு செலவை எகிறவைத்துவிட்டார் என்ற சர்ச்சையில் கையும் களவுமாக சிக்கிவிட்டார் அந்த நடிகர். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று மறுக்கவும், ஆமாம் அப்படித்தான் செய்தேன் என ஒப்புக்கொள்ளவும் இல்லை. மீண்டும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார்.

என்னை வைத்து யார் படமெடுத்தால் என்ன..? எவன் நஷ்டமடைந்தால் எனக்கென்ன..? என்று இருக்கும் நடிகர். தனது ரசிகர்களை கூட மதிப்பது கிடையாது என்பது அவரது சமீபத்திய பேட்டிகள் ஆதாரமாக அமைந்துள்ளன.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

நான் எது பண்ணாலும் ஒரு கைதட்டி ரசிக்குரதுக்குன்னு ஒரு கூட்டம் இருக்குது. அதே மாதிரி, நான் எது பண்ணாலும் என்னை கண்டபடி திட்டுறதுக்குன்னு ஒரு கூட்டம் இருக்குது என்று பொத்தாம் பொதுவாக வாய்க்கு வந்த விஷயங்களை பேசி தனது ரசிகர்களின் வெறுப்பையும் நடிகர் சம்பாதித்து வைத்துள்ளார் என்றே தெரிகிறது.


எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது நடிகரின் போதைப்பழக்கம் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறதாம். இப்படியே போனால் மகனின் உயிருக்கே ஆபத்து என்றும் ஜாதக்கத்தில் வேறு மகனின் கட்டம் சரியில்லை என்பதாலும் பீதியான தாடிக்கார அப்பா. மகனை போதையில் இருந்து மீட்க படாத பாடுபட்டு, இறுதியாக ஒரு டாக்டர் ஒருவரை நியமித்திருகிறாராம்.

தற்போது, நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக தேறிவருகிறாராம் நடிகர். தனது அடுத்த கட்ட நகர்வின் மூலமாக கோலிவுட்டை அதிரவைப்பாரா..? இல்லை, மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு போய்விடுவாரா..? என்பதே இப்போது அவரது ரசிகர்களின் மனதில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!