பட்லர் பாலு – விமர்சனம்

நடிகர் யோகிபாபு
நடிகை நாயகி இல்லை
இயக்குனர் சுதிர் எம்.எல்
இசை கணேஷ் ராகவேந்திரா
ஓளிப்பதிவு பால் லிவிங்க்ஸ்டன்

சென்னையில் வசித்து வருகிறார் யோகிபாபு. உதவி இயக்குனர் ஆக வேண்டும் என்பதற்காக வாய்ப்பு தேடி, கிடைக்காத சூழ்நிலையில் இமான் அண்ணாச்சி நடத்தும் கேட்டரிங் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். யோகிபாபுவின் நண்பர்கள் மூவர் வேலை தேடி சென்னைக்கு வருகின்றனர். அவர்களுக்கு வேலை வேண்டும் என்று இமான் அண்ணாச்சியிடம் கேட்கிறார் யோகிபாபு.

இந்த சூழலில் நாயகிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கேட்டரிங் பணி இமான் அண்ணாச்சிக்கு கிடைக்கிறது. பெரிய ஆர்டர் கிடைத்துள்ளதால் யோகி பாபுவின் நண்பர்களையும் வேலைக்கு சேர்த்துக்கொண்டு நாயகி வீட்டுக்கு போய் சேருகிறார்கள். அங்கு டெக்கரேஷன் வேலைக்கு வரும் மயில்சாமியும், தாடி பாலாஜியும் வருகின்றனர்.

நாயகியை ஒருதலையாக காதலித்த வில்லன், திருமணத்துக்கு முன் நாயகியை கடத்த திட்டமிட்டுகிறார். கடத்துவதற்காக ரோபோ சங்கர் உள்ளிட்ட இரண்டு அடியாட்களை அனுப்பி வைக்கிறார். இவர்களுக்கு முன் யோகி பாபுவின் நண்பர்களான நாயகன், நாயகியை கடத்திச் செல்கிறான். இதனால் நாயகியின் தந்தை போலீசில் புகார் கொடுத்து தேடுகிறார்கள். இறுதியில் நாயகியை யோகி பாபுவின் நண்பர்கள் கடத்தியது ஏன்? நாயகியை தேடி கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகன், நாயகிகள் இருந்தாலும் முதல் பாதியில், யோகிபாபு, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, தாடி பாலாஜி ஆகிய காமெடி பட்டாளங்கள் படத்தை நகைச்சுவையாக கொண்டு செல்கிறார்கள். இரண்டாம் பாதியில் நாயகன், நாயகிகளின் காதல் காட்சிகள் சோர்வை ஏற்படுத்தினாலும் இறுதியில் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

காமெடி நட்சத்திரங்களை தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள். இவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நகைச்சுவையை மட்டுமே மையமாக அதில் காதல், சுவாரஸ்யம் ஆகியவைகளை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சுதிர்.எம்.எல்.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். ஒளிப்பதிவில் பால் லிவிங்க்ஸ்டன் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘பட்லர் பாலு’ காமெடி கலாட்டா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!