தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் படு பிரமாண்டமாக நடந்து முடிந்தது, இதில் விஜய் எல்லோரையும் புகழ்ந்தார்.
ஆனால், நடிகர் சுந்தரபாண்டியன் புகழ் சௌந்தர் அவர்களை தன் தம்பி போல் நினைத்து பாராட்டினார்.
அவர் இதற்கு முன்பு வேறு யாரையும் இப்படி பாராட்டியது இல்லை என விஜய்யின் தந்தையே சௌந்தர் அவர்களுக்கு போன் செய்து சொன்னாராம்.
சௌந்தர் எப்போதும் நாட்டு மக்கள் நலன் குறித்து விஜய்யிடம் பேசியது அவரை மிகவும் இம்ப்ரஸ் செய்ததாக கூறப்படுகின்றது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!