அந்தப் படத்தில் நான் நடித்திருக்கக் கூடாதுதான்: வருந்தும் யாஷிகா ஆனந்த்!

கௌதம் கார்த்திக் நடிப்பில் வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நான் நடித்திருக்கக் கூடாது என்று நடிகை யாஷிகா ஆனந்த் ரொம்ப நாளாகவே வருத்தத்தில் உள்ளாராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகைகளில் நடிகை யாஷிகா ஆனந்தும் ஒருவர். ஆனால், இதற்கு முன்னதாக பல படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்களிடையே அதிகளவில் பிரபலமாகவில்லை. தற்போது யாஷிகா ஆனந்த் பெயரை சொன்னாலே போதும் ரசிகர்கள் முகத்தில் புன்னகைதான் தெரியும். அந்தளவிற்கு பிரபலமாகிவிட்டார்.

ஆனால், இன்னமும் அவர் வருத்தத்தில் இருந்து வருகிறாராம். காரணம், அவரது நடிப்பில் வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம்தான். ரசிகர்களிடையே நல்லவிதமான விமர்சனம் பெற்றாலும், யாஷிகா ஆனந்தை மட்டும் அவரது ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனராம்.

ஆனால், அதற்கெல்லாம் பதில் ஏதும் சொல்லாமல் குற்ற உணர்வோடு இருந்து வருகிறாராம். இது குறித்து அவர் கூறுகையில், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருக்கவே கூடாது. அதில், நடித்ததற்காக இன்னமும் நான் வருத்தப்படுகிறேன். என்னிடம் கதை சொன்னபோது, குறிப்பிட்ட காட்சிகளை மட்டுமே சொன்னார்கள். ஆனால், அதற்கு மாறாக சில காட்சிகளில் நான் நடிக்க வேண்டியிருந்தது. அதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.

எனினும், இப்படத்தில் நடித்ததற்கு எனக்கு எதிர்ப்புதான் வந்தது. இனிமேல், நடிப்புக்கு முக்கியமுள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க இருக்கிறேன். ஆனால், கிளாமராக நடிப்பதை மட்டும் குறைத்து வருகிறேன். சமீபத்தில் ஜாம்பி படம் வெளியானது. இதில், கூடா கிளாமரை கொஞ்சம் குறைத்திருக்கிறேன். இனி வரும் படங்களில் கிளாமரை குறைத்துதான் நடிக்க இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மகத்துடன் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இவன்தான் உத்தமன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. சஸ்பென்ஸ் த்ரில்லருடன் மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேக்வென் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!