சர்ச்சை ஏற்படுத்திய சின்மயிக்கு இத்தனை லட்சம் அபராதமா? – அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் மீடூ என்கிற விஷயம் பிரபலம் ஆக ஆரம்பித்ததும் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். அது மட்டுமின்றி அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறினார்.

இது ஒருபுறமிருக்க சின்மயி சந்தா செலுத்தவில்லை என கூறி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் அவர் தமிழ் சினிமாவை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனால் மீண்டும் சர்ச்சை வெடித்தது. தன்னை பழிவாங்க ராதாரவி இப்படி செய்துள்ளதாக சின்மயி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் தற்போது சின்மயியை மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்க்க 1.5 லட்சம் ருபாய் அபராதம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இது பற்றி சின்மயி கோபமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.