மெர்சல் படத்திலிருந்து ஜோதிகா விலகியது ஏன்? இதோ..

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சுமார் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது, இந்நிலையில் இப்படத்தை பற்றிய ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்கவிருந்தாராம். ஆனால், படப்பிடிப்பு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் படத்திலிருந்து விலகியுள்ளார்.

இதுக்குறித்து சினிமா பிரபலம் ஒருவர் ஜோதிகா இந்த படத்திலிருந்து விலகியது உண்மை தான்.

அது அவரின் குடும்ப சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!