பைக்கால் ஏற்படும் பிரச்சனை – கணேசா மீண்டும் சந்திப்போம் விமர்சனம்

நடிகர் பிருத்விராஜ்
நடிகை ஓவியா
இயக்குனர் ரதீஷ் எரேட்
இசை என் எல் ஜி சிபி
ஓளிப்பதிவு விபின்ட் வி ராஜ்

வெளியூரில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் பிரித்வி. அவர் தேடி வந்த நபர் கைதாகி சிறைக்கு சென்றுவிடுகிறார். செய்வதறியாது தவிக்கும் பிரத்விக்கு, ஆட்டோ டிரைவர் கிரேன் மனோகரின் நட்பு கிடைக்கிறது. அவர் மூலம் தீப்பெட்டி கணேசனின் ரூமில் இணைகிறார்.

சென்னையில் யாருக்கும் தெரியாமல் திருட்டு வேலைகள் செய்து பணம் சேர்க்கிறார் பிரித்வி. அவரை அவ்வப்போது போனில் தொடர்பு கொள்ளும் சிங்கம்புலி, விரைவாக பணத்தை ரெடி செய்து கொண்டு வரும்படி கூறுகிறார். இதற்கிடையே, பிரித்வியை வலை வீசி தேடுகிறார் வில்லன் கட்டாரி.

இந்நிலையில், பிரித்விக்கு ஓவியாவின் நட்பு கிடைக்கிறது. அவரையும் ஏமாற்றி பணம் பறிக்கிறார். ஒருகட்டத்தில் தீப்பெட்டி கணேசன் தனது தங்கை திருமணத்திற்காக கடன் வாங்கி வைத்திருக்கம் ரூ.2 லட்சம் பணத்தையும் திருடிக் கொண்டு புறப்படுகிறார் பிரித்வி.

இறுதியில் பிரித்வி எதற்காக திருடி பணம் சேர்க்கிறார்? யாருக்காக பணம் சேர்க்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

திருட்டுதனம் செய்து முழிப்பது, பதறுவது, காதலியை நினைத்து ஏங்குவது என தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார் பிரித்வி. முதல் பாதியில் மட்டும் துணை நடிகை போல் வருகிறார் ஓவியா. 90 எம்எல் படத்தை போலவே இதிலும், தம்மடிப்பது, பீர் குடித்து என சகலமும் செய்கிறார்.

ஹீரோயின் தேவிகாவுக்கு படத்தில் பெரிதாக வேலை எதுவும் இல்லை. வில்லன் கட்டாரியாக வரும் விஜயன், நன்றாகவே மிரட்டியிருக்கிறார்.

ஒரு சாதாரண விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதனை சஸ்பென்ஸ் படமாகவும், காமெடி படமாகவும் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ரதீஷ் இரேட். ஆனால் படம் திரில்லிங்காவும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது. திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

என்எல்ஜி சிபி இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான். பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விபிந்த் வி ராஜ்.

மொத்தத்தில் ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ ஒருமுறை போதும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.