ஆர்யாவுக்கு கல்யாணம் ஆன பிறகும் இது தேவையா? – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அபர்ணதி..!

சின்னத்திரையில் புதியதாக தொடங்கபட்ட கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை.

16 இளம் பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஆர்யா தன்னுடைய திருமணத்திற்கு பெண் தேடினார். ஆனால் இறுதியில் பிரபல நடிகையான சாயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த 16 போட்டியாளர்களின் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் அபர்ணதி. தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் வருகிறார்.

ஆர்யாவிற்கு திருமணம் முடிந்து விட்ட நிலையிலும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பெயரை அபர்ணதி ஆர்யா என்று வைத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆர்யாவுக்கு திருமணமாகி விட்ட பிறகும் இப்படியொரு ப்ரொபைல் நேம் தேவையா? என விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு போட்டோவிற்காக அபர்ணதியை வெளுத்து வாங்கி வருபவர்களுக்கு இந்த பெயர் விவகாரம் சிக்கி இருப்பது மேலும் அவரை வறுத்தெடுக்க வைத்துள்ளது. அபர்ணதி தான் பாவம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.