அப்படியே நயன்தாராவை கண்முன் கொண்டு வந்த தீபா வெங்கட், வைரலாகும் வீடியோ

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவருக்கு படங்களில் பெரும்பாலும் சின்னத்திரை பிரபலம் தீபா வெங்கட் தான் டப்பிங் பேசுவார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் கோலமாவு கோகிலா படத்திற்காக நயன்தாராவிற்கு டப்பிங் பேசியதற்கு விருது ஒன்றை பெற்றார்.

அந்த விருதை பெற்றவுடன் நயன்தாரா நடித்த காட்சி ஒன்றிற்கு டப்பிங் பேசும்படி தீபா வெங்கட் அவர்களிடம் கேட்டனர்.

அவரும் அதை செய்ய ஆரம்பிக்க, ஆடியன்ஸிடமிருந்து செம்ம ரெஸ்பான்ஸ், ஒரு நொடி நயன்தாராவை கண்முன் கொண்டு வந்துவிட்டார்.