திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் வரதராஜன் என்பவருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.
இதற்கு ரூ.60 லட்சம் கமிஷன் பேசி, ரூ.30 லட்சத்தை 6 மாதங்களுக்கு முன் வரதராஜன் கொடுத்திருந்தார். ஆனால் கடன் வாங்கி தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து ரூ.30 லட்சத்தை மட்டும் முதலில் சீனிவாசன் திருப்பிக்கொடுத்தார். மீதி ரூ.30 லட்சம் செக்காக கொடுத்திருந்தார்.
அந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. பின்னர் வரதராஜன் துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சீனிவாசனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் சீனிவாசனுக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#