அமலாபாலின் அலட்சியத்தால் ஆணையர் வைத்த செக்..!!! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!!


தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் அமலாபால் கடந்த மாதம் 1 கோடிக்கும் அதிகமான விலையில் காஸ்லி கார் ஒன்றை வாங்கி இருந்தார்.

நடிகை அமலாபால் போலி முகவரி கொடுத்து கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்தது சில தினங்களுக்கு முன் கண்டுபிடிக்கபட்டது

இந்த காரை போலி ஆவணங்கள் மூலம் புதுசேரியில் பதிவு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது திரை உலகினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியது

இது பற்றி விசாரணை நடத்த எர்னாகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள் அமலபாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் அமலாபால் ஆஜர் ஆகாமல் அவரது வக்கீல் ஆஜராகி அவரது ஆவணங்களை சமர்பித்தார். அப்போது புதுசேரியில் பதிவு செய்த முகவரி மட்டும் போலியானது என தெரிய வந்தது.


இதனையடுத்து மீண்டும் அமலபாலுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்,

ஆனால் அமலாபால் நேரில் ஆஜராகததால் அவரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போக்குவரத்து துறை ஆணையர் அணில்காந்த் ஆணை பிறப்பித்துள்ளார்

வழக்கு பதிவு செய்தால் அமலாபாலை கைது செய்யவும் சான்ஸ் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#