தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கிவரும் திரைப்படம் நாச்சியார்.
இந்த படத்தில், ஜோதிகா, ஜூ.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாச்சியார் படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இந்த படம் குறித்த தகவலை இதுவரை இயக்குனர் பாலா வெளியிடவில்லை.
ஆனால் நாச்சியார் படத்தில், ஜோதிகாவுக்கு தம்பியாக ஜூ.வி.பிரகாஷ் நடிக்கிறார் என்கின்ற தகவல் மட்டும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், நாச்சியார் படத்தின் டீசர் வீடியோ நேற்று வெளியானது.
இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.
அந்த டீசரின் இறுதியில், ஒருவரை கன்னத்தில் அறைந்து விட்டு.., அவர் ஒரு கெட்ட வார்த்தை பேசுகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்காத வார்த்தையை டீசரில் பயன்படுத்தியுள்ளனர்.
அதுவும் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசி நடித்திருப்பது அனைவரின் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனோடு, இது சர்ச்சையை கிளப்பும் எனத் தெரிந்தும்.., படத்தின் விளம்பரத்திற்காக வேண்டுமென்றே இந்த காட்சி டீசரில் வைக்கப்பட்டுள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#