பிரபாஸ் பெரியம்மா சொன்னதை கேட்டு கவலையில் அனுஷ்கா ரசிகாஸ்

பிரபாஸ், அனுஷ்கா காதல்
பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அந்த தகவலை அனுஷ்கா இதுவரை மறுக்கவில்லை. ஆனால் பிரபாஸ் தான் அனுஷ்கா தனது குடும்ப நண்பர் மட்டுமே என்று மீண்டும், மீண்டும் கூறி வருகிறார். அவர் பேச்சை நம்ப யாரும் தயாராக இல்லை. பிரபாஸ், அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் அவர்கள் ரசிகர்களின் விருப்பம் ஆகும்.

திருமணம்
குபலி படத்தை அடுத்து பிரபாஸ் நடித்த படம் சாஹோ. அந்த படம் ரிலீனான உடன் பிரபாஸின் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் பிரபாஸோ அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அவர் பூஜா ஹெக்டேவுடன் சேர்ந்து ஜான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இத்தாலியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்ட பிறகு பிரபாஸ் தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். திரும்பி வந்த பிறகு மீண்டும் ஜான் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.

பெரியம்மா
பிரபாஸ் திருமணம் பற்றி வழக்கமாக அவரின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு தான் பேசுவார். இம்முறை பெரியம்மா சியாமளா தேவி பேட்டி அளித்துள்ளார். சியாமளா கூறியிருப்பதாவது, பிரபாஸ் திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரின் திருமணம் பற்றி வரும் வதந்திகளை பார்த்து சிரிப்போம். எங்களுடையது பெரிய குடும்பம். குடும்பத்தார் அனைவருடனும் நன்றாக பழகும் பெண்ணாக தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

ரசிகர்கள் கவலை
பிரபாஸ் பெரியம்மா அளித்த பேட்டியை பார்த்து அனுஷ்கா ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். எப்படி இருந்தாலும் பிரபாஸ் அனுஷ்காவை தான் திருமணம் செய்வார் என்று நம்பிய ரசிகர்களுக்கு இது ஏாற்றத்தை அளித்துள்ளது. அனுஷ்காவுக்கும் அவர் வீட்டில் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை நல்ல மாப்பிள்ளை அமையாமல் உள்ளது. அனுஷ்காவும் கோவில், கோவிலாக சென்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!