பாலிவுட் சினிமாவை சேர்ந்த பாடகி அனுராதா பாட்வால். இவரிடம், மும்பை அர்னாலா கடற்கறையில் வீட்டு மனை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறியுள்ளது ஒரு நிறுவனம். இதேபோல் இந்த நிறுவனம் பலரிடம் விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த அறிந்த பாடகி அனுராதா, மாண்டார் அவனுயு , தி1 குரூப் ஒப் பில்டிங்ஸ் இன் நரங்கி, விரார் என்ற இடத்தில் இரண்டு பிளாட்டுகளை பணம் கொடுத்து புக்செய்துள்ளார்.
இதில் ஒரே பிளாட்டை அந்நிறுவனம் 7 பேருக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனால் பாடகி மோசடி புகார் அளித்ததால் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அனுராதா பாட்வால் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.