தமிழிசையை மீண்டும் அவமானப்படுத்திய சித்தார்த்..!! என்ன சொன்னார் தெரியுமா..?


தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் முன்பாக “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என கோஷமிட்டார் மாணவி சோஃபியா. இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை அவர் மீது புகார் அளித்ததின் பேரின் சோஃபியா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் பற்றி ட்விட்டரில் நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார். சோபியாவுக்குப் பின் யாரோ இருந்து இயக்குவதாக தமிழசை கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், “இந்திய அரசியலில் பெரும்பாலான மக்களைத்தான் குறிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், சோபியா மீது விமான நிலைய நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்கவில்லை, விமான நிலையப் பாதுகாப்புப் படையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ள சித்தார்த், “விமானம்” என்பதற்கான ஆங்கில வார்த்தையை தவறாக பல முறை தன் ட்விட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ள தமிழசையின் தரப்புதான் பொய்யான தகவல்களுக்கு பொறுப்பு. எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!