17 வருடங்களுக்குப்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த பிரபல நடிகை..!!


நடிகை இஷா கோபிகர் 1998ல் ‘காதல் கவிதை’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து ‘என் சுவாசக் காற்றே’, ‘ஜோடி’, ‘சந்திரலேகா’, ‘நெஞ்சினிலே’. அதையடுத்து அவர் கடைசியாக விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த படம் ‘வாஞ்சிநாதன்’ இந்தப் படம் 2001ல் வெளியானது.

பின்னர் அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் 17 ஆண்டுகள் கழித்து தற்போது தமிழில் ஒரு படத்தில் நடிக்க வந்துள்ளார்.


ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் பிரீத்தி சிங் நடிக்கிறர்.

மேலும் படத்தில் கருணாகரன், யோகிபாபு, பானுப்ரியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை இஷா கோபிகர் நடிக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!