பிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ள படுக்கைக்கு அழைத்தார்கள் – பிரபல தொகுப்பாளி அதிர்ச்சி பேட்டி.!

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

இதே போல் தெலுங்குவில் வெகு விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது, இந்த நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றிய என்னிடம் கேட்காதீர்கள், எனக்கு அந்த கான்செப்ட்டே பிடிக்கவில்லை என கூறிய நாகர்ஜுனா தான் தற்போது தொகுத்து வழங்க ஒப்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிக் பாஸ் டீம் என்னை அணுகினார்கள், நானும் கலந்து கொள்வதாக கூறியிருந்தேன்.

அதன் பிறகு அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எனக்கு போன் செய்து உங்களை தேர்வு செய்வதால் எனக்கு என்ன கிடைக்கும் என மார்கமாக கேட்டார்.

அப்போதே எனக்கு புரிந்து விட்டது அவர் தவறான எண்ணத்தில் கேட்கிறார் என்பது, அதனால் நான் பிக் பாஸ் வாய்ப்பை மறுத்து விட்டேன் என கூறியுள்ளார் தெலுங்கு திரையுலகை சேர்ந்த தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி.

ஸ்வேதா இவ்வாறு ஓபனாக கூறியிருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.