பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கிவிட்டது. 16 பேரும் உள்ளே சிறப்பான வரவேற்புடன் வந்துவிட்டார்கள். முதல் நாளே அதிகாலையில் எழுந்ததும் அழுத தாடி பாலாஜியின் மனைவி நித்யா அழுதுவிட்டார்.
கண்ணாடியை பார்த்து அவர் பேசும் போது நான் வழக்கம் போல என மகளை காலையில் பள்ளிக்கு அனுப்புவது போல எழுந்துவிட்டேன். ஆனால் எழுந்து பார்த்ததும் பாப்பா என் அருகில் இல்லை.
அவளை பிரிந்து இருக்கிறேன். ஆனால் அவள் கொடுத்த தயிரியத்தால் தான் நான் இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் போங்க மம்மி நான் இருந்துகொள்கிறேன் என கூறினாள் என கண்கலங்கிவிட்டார் நித்யா.
ஆனால் நான் அழமாட்டேன் என்றவர் அழுதுவிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!