பிக்பாஸ் போட்டியாளர் ஆர்ஜே வைஷ்ணவி பற்றி உங்களுக்கு தெரியுமா..? அட.. இவரா இப்படி..!!


வைஷ்ணவி , இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்துவருகிறார்.மேலும் இவர் ஒரு பத்திரிக்கையாளர். பல கட்டுரைகள் எழுதுயுள்ளார். அது மட்டுமில்லாமல் இவரது தாத்தா மிக பிரமலமானவர் . சாவி என்று அழைப்படும்சா. விசுவநாதன் என்ற எழுத்தாளரின் பேத்தி .

சா. விசுவநாதன் சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர். தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர் கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

மேலும் இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்துள்ள நபர் என்பதால் , அவர் மீது அதிக எதிர்பார்ப்புக்கள் உள்ளது. மேலும் அவர் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என்று கருந்தப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!