பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனந்த் வைத்தியநாதன் இப்படிபட்டவரா..? வைரலாகிய சுவாரஸ்ய தகவல்..!!


அனந்த வைத்தியநாதன் தன்னுடைய நான்கு வயதிலேயே பாட ஆரம்பித்தாராம். அப்போது தனது மழலை மொழியை கீதமாக பாடியதைக் கண்டு அனைவரும் அதிசயத்துப் போனார்கள். பின்னாளில், தனக்குள் இருக்கும் சங்கீதத்தையே அவர் தனது வாழக்கையாக மாற்றிக் கொண்டார். எம்பிஏ படிப்பு படித்துள்ள அனந்த் வைத்தியநாதன், மற்ற எந்த வேலையிலும் நாட்டமில்லாமல், முழுநேர சங்கீத வித்வானாக மாறத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குரல் நிபுணர் எனப்படும் வாய்ஸ் எக்ஸ்பெர்ட்டாக. இந்தியாவில் வாய்ஸ் எக்ஸ்பெர்ட் என்பது மிகமிக குறைவு. சென்னையில் தற்போது ஒரிரு வாய்ஸ் எக்ஸ்பெர்ட் இருப்பதாக கூறப்படுகிறது.

வாய்ஸ் எக்ஸ்பெர்ட் குறித்து அவர் கூறும் போது, விளையாட்டுப் போட்டிக்கு எவ்வாறு பயிற்சியாளர்கள் உள்ளார்களோ அதே போன்று தான் சங்கீதத்தில் வாய்ஸ் எக்ஸ்பெர்ட். சுருங்கக் கூறினால் ஒருவரது குரலில் இருக்கும் மாயாஜாத்தை வெளிக்கொண்டு, மெல்லிசை, குத்துப்பாட்டு என எந்த பாடல்களானாலும் அதை பாட வைக்க பயிற்சி கொடுப்பதே வாய்ஸ் எக்ஸ்பெர்ட்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருக்கும் போதே இயக்குனர் பாலா, தன்னுடைய அவன் இவன் படத்தில் நடிக்க வருமாறு அழைப்பு விடுத்தார். முதலில் பாலா கூறிய கதாபாத்திரத்தை சிந்தித்த அனந்த் வைத்தியநாதன், பின்னர் அதனை விரும்பி ஏற்றுக் கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!