எங்க ஊர்ல கலவரம்.. என்னால் ஒன்னும் செய்ய முடியல..!! பிரபல இயக்குனர் வருத்தம்..!!


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மாணவி உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து தற்போது பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சாமி, சிங்கம் ஆகிய படங்களை இயக்கிய ஹரியின் சொந்த ஊரும் தூத்துக்குடி தான். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அவர் கூறுகையில், தூத்துக்குடியில், சாதி, மதம் கடந்து எல்லோரும் ஒன்றாகத்தான் பாசத்தோடு இருப்பார்கள். நாம் வாழும் வாழ்க்கையில், இதெல்லாமே நடக்கிறதா? என்று நினைக்கும் போது நம்பமுடியவில்லை. எப்போதும், ரவுடிகளையும், கெட்டவர்களையும் மட்டும் துப்பாக்கியால் சுட்ட போலீஸ் தற்போது, உரிமைக்காக போராடும் அப்பாவி மக்களையும் துப்பாக்கியால் சுட ஆரம்பித்துவிட்டார்கள்.

மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ் தற்போது மக்களின் உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை தற்போது தமிழ்நாட்டில் நடக்க தொடங்கியுள்ளது. விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால், பக்கத்தில், நடந்து வரும் தூத்துக்குடி கலவரத்தைப் பார்த்ததுல இருந்து எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதனால், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டோம் என்று இயக்குனர் ஹரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!