படப்பிடிப்பின் போது அஜித் செய்த செயலால் வியப்பில் படக்குழு..!! என்ன செய்தார் தெரியுமா..?


சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து, தல நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஸ்வாசம்’. இந்த படப்பிடிப்பின் போது அஜித் செய்த செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

இயக்குனர் சிவாவுடன் 4வது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ‘விஸ்வாசம்’ எனும் பெயரில் தனது 58 வது படத்தில் நடித்து வருகின்றார். இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பின் போது அஜித்தின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித்க்கு காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பின் போது காலில் அடிபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் படப்பிடிப்பை நிறுத்தி விடலாம் என இயக்குனர் சிவா கூறிய போது, அஜித், “வேண்டாம், ஏற்கனவே ஸ்டிரைக்கால் ஷூட்டிங் காலதாமதமாக தான் தொடங்கியது. என்னால் மீண்டும் ஷூட்டிங் தடைப்பட வேண்டாம்.” என கூறி வலியை பொறுத்துக் கொண்டு படத்தில் நடித்துள்ளார். இதனால் படக்குழுவினர் அஜித்தை கண்டு நெகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த படம் இந்தாண்டு தீபாவளியன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!