‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு போட்டியாக அடுத்த படம் ரெடி..!!


சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்தில் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட்டானது.இவ்வளவு ஆபாசமாக படத்தை எப்படி சென்சார் போர்டு அனுமதித்தார்கள் என சினிமா துறையை சேர்ந்த பலர் விமர்சித்தும், கண்டனமும் தெரிவித்தனர். இருந்தாலும் வசூலை வாரி குவித்தது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம்.


இந்நிலையில் இந்த ஆபாசம் படம் போலவே அடுத்து ஒரு படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்துக்கு ‘பல்லு படாம பாத்துக்க’ என்று வைத்துள்ளனர். இந்தப் படத்தின் நாயகனாக ‘அட்டகத்தி ’தினேஷ் நடித்து வருகிறார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை விஜய் வரதராஜ் இயக்கி வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!