“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தை கேவலமாக விமர்சித்த இயக்குனர்..!!


இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு எதிராகக் இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார் .

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் வெளியாகி ஓடிக்கொண்டுள்ளது. அடல்ட் காமெடி படமான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்துக்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தில், ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.இந்நிலையில், இந்த மாதிரியான படங்கள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும். என என இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார் .

அதில், ‘திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள் கொண்டுவர முடியும் என்றார்கள். சில தரம்கெட்ட திரைப்படங்களால் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியம், இதிகாசம், சராசரி மனித வாழ்க்கையைக் கொண்டாடிய நம் திரைப்படங்கள், இன்று சதையை மட்டுமே கொண்டாடுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி