‘ராக்கெட்ரி’ படத்தை பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள்.. மாதவன் நெகிழ்ச்சி..

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ ஓடிடி-யில் வெளியானது. இருந்தாலும் சில திரையரங்குகளில் இத்திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மாதவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஓடிடி-யில் ராக்கெட்ரியை பார்த்துவிட்டு தியேட்டர்களுக்கு செல்லும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஞ்ஞானி நம்பி நாராயணனின் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!