கௌரவ டாக்டர் பட்டம் பெறும் இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ஷங்கர். இவர் ஜென்டில்மேன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ‘ராம்சரண் 15’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னணி பல்கலைகழகமான வேல்ஸ் நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே டாக்டர் பட்டம் பெற இருக்கும் இயக்குனர் ஷங்கருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!