தாயின் பிரிவை தாங்க முடியாமல் அழுதுகொண்டே இருக்கும் ஸ்ரீதேவி மகள்..!! துக்கத்தில் குடும்பத்தினர்..!!


தனது தாய் ஸ்ரீதேவியின் மரண செய்தி கேட்டது முதலே தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும் அவரது மகள் ஜான்விக்கு நடிகர்-நடிகைகள் உட்பட பலரும் தொடர்ந்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

தனது கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்மாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ந்தேதி இரவு திடீரென மரணம் அடைந்தார்.

மரணம் அடைந்த ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜான்வி ‘தடக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்துக் கொண்டு இருக்கிறார். படப்பிடிப்பு இருந்ததால் அவர் துபாய் செல்லவில்லை. ஜான்வி அம்மா செல்லம். எந்த விஷயமானாலும் ஸ்ரீதேவியிடம் பகிர்ந்து கொள்வார்.


ஜான்வியை கதாநாயகியாக பார்க்க ஆசைப்பட்ட ஸ்ரீதேவி பல இயக்குனர்களிடம் கதை கேட்டு பிறகு ‘தடக்’ படத்தில் நடிக்க வைத்தார். இரண்டு மாதங்களில் இந்த படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தை பார்க்காமலேயே ஸ்ரீதேவி இறந்து போனார்.

இந்நிலையில் தனது தாய் ஸ்ரீதேவி இறந்த தகவல் கிடைத்ததும் ஜான்வி கதறி துடித்தார். அப்போது முதல் ஜான்வி தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறார். தான் அம்ம செல்லம் என்றும், அம்மா இல்லாமல் தான் இனி எப்படி வாழப்போகிறேன் என்றும் தன்னை சந்தித்து ஆறுதல் சொல்ல வருபவர்களிடம் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்.


ஜான்வி மற்றும் குஷி இருவரையும் போனிக பூரின் தம்பியும் நடிகருமான அனில்கபூர் வீட்டுக்கு அழைத்துச் சென்று உறவினர்கள் அவரை தங்க வைத்துள்ளனர். அங்கும் அவர்கள் இருவரும் அழுதுகொண்டே இருக்கின்றனர்.

போனிகபூரின் முதல் மனைவி மூலமாக பிறந்த நடிகர் அர்ஜுன்கபூர், தனது தங்கை அன்ச்ஜஷுலாவை அழைத்துக்கொண்டு அனில்கபூர் வீட்டுக்கு சென்று ஜான்வியை சந்தித்து ஆறுதல் கூறினார். நடிகைகள் ஷில்பா ஷெட்டி, ராணிமுகர்ஜி, ரேகா ஆகியோரும் அழுது கொண்டிருந்த ஜான்விக்கு ஆறுதல் கூறினார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி