பிரபல சேனலில் இளமைப் புதுமை என்ற ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் வந்த இடம் தெரியாமல் ஒரு சில படங்களிலேயே சென்று விடுகிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர்களது போட்டோக்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கின்றன.
ஒரு காலத்தில் திரை உலகில் நீங்கா இடம் பிடித்தவர்கள், இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள்..
அலை பாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்காவாக நடித்திருந்தார் சொர்ணமால்யா. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார். பின்னர் இவரை எந்தவொரு படங்களிலும் பார்க்க முடியவில்லை.
மணிரத்தினம் படத்திற்கு பிறகு, திரையில் பல படங்களில் தோன்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அலை பாயுதே படத்திற்கு பின் , முழுமையாக பரத நாட்டியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்..
திரை உலகிற்கு வரும் முன்னரே பரத நாட்டியத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்..இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி